Quantcast
Channel: Featued – Spiritual Devotional Wellness Yoga Hindu Religion Guru Spiritual Web TV
Viewing all 679 articles
Browse latest View live

சித்த தரிசனம் பெற எளிய பயிற்சி முறை!

$
0
0

 சித்தர்களை நாம எல்லோருமே நம்புகின்றோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில் மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவர்கள் இருந்ததர்க்கான சான்றுகள் பல உண்டு. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் இன்றும் உதவி செய்கின்றார்கள் என்பதை நாம் ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். சித்தர்களுடன் நமக்கு தொடர்பு ஏற்பட்டால், நம்முடைய கர்ம வினைகளில் இருந்து விடுபடலாம்…

சித்தர்களை சந்திப்பதென்பது எல்லாறாலும் முடியுமா ?

முயற்ச்சி செய்தால் அவர்களை சந்திக்கலாம்:

 பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர்  பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.

 ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள். ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். ஆசனப் பலகை அல்லது , தரையில் – மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் – உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பின்பு,

ஓம் சிங் ரங் அங் சிங்

 – என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள்.

 நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் – தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் – இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை. இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் – உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. இதனால் , உங்களுக்குமனபலம் கூடும்.
ஒரு சாதாரண செடி வளர்வதே – அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவமும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம். இந்த பயிற்சிக்கு நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும். விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு தெய்வீக அனுபவம் கிட்டும்…

பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #udupikrishnan #siddha #sidhar

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666



 

 

 

The post சித்த தரிசனம் பெற எளிய பயிற்சி முறை! appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


அஷ்டமியில் பிறந்த கண்ணன்

$
0
0

 கண்ணனின் பிறந்த நாள் எப்படி அஷ்டமியில்? அது குறித்து நெகிழவைக்கும் ஒரு சம்பவம் உண்டு. அஷ்டமி, நவமி என்று இரு திதித் தேவதைகள் இருவருக்கும் மிகுந்த கவலை தங்களை யாருமே நற்காரியங்களுக்காகக் கண்டுகொள்வதில்லை என்பது அவர்களது மனக்குறை. இதை யாரிடம் சொல்லி மீட்சிபெறலாம் என்று சிந்தித்து ஈற்றில் மற்றவர் குறை போக்கும் மஹாவிஷ்ணுவிடமே சரணடைந்தனர். “மஹா பிரபோ எங்கள் நிலையை எண்ணிப் பாருங்கள் சுவாமி. அஷ்டமியாகிய என்னையும் நவமியாகிய இவளையும் யாருமே நன்நாளாகக் கண்டுகொள்வதில்லை, சுபகாரியங்களில் ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இந்த வேதனையை எங்களால் தாங்க முடியவில்லை. இத்துன்பம் போக்கவல்லவர் நீங்களல்லவோ” என்றிறைஞ்சி நின்றனர். மஹா விஷ்ணுவும் “கவலை வேண்டாம் உங்கள் குறைதீர வழி செய்தருள்வேன்” என்றாராம். அதன்படி ஒரு நவமித் திதியிலே ராமவதாரத்தையும் அட்டமித் திதியிலே கிருஷ்ணாவதாரத்தையும் மேற்கொண்டு பரமாத்மா இவ்வுலகம் உய்ய வழி செய்தாராம்.

 அறியாமை மேலீட்டினால் அஷ்டமி, நவமித் திதிகளை ஒதுக்கி வைத்த மக்கள் அத்தினங்களிலே கோகிலாஷ்டமியையும் இராம நவமியையும் மிகக் கோலாகலமாகக் கொண்டாட மட்டும் தவறுவதேயில்லை. இறைவன் முன்னே எல்லோரும் சமமே. இங்கு உயர்வு தாழ்வுக்கு இடமேயில்லையென்ற உயர்ந்த தத்துவத்தை இந் நிகழ்வுகள் சொல்லாமல் சொல்கின்றனவல்லவோ. விஷ்ணு பரமாத்மா பூமித்தாய்க்கு வரமளிக்க நினைத்தபடி ஆவணித் திங்கள் ரோகினி நட்சத்திரத்து அஷ் டமித் திதியில் அவதாரமானார்… அந்தப் புண்ணிய தினமே கோகுலாஷ்டமி என்றும், ஜன்மாஷ் டமி, கிருஷ்ண ஜெயந்தி என்றும் நாம் கொண்டாடி மகிழ்கின்றோம். வைணவ சம்பிரதாயத்தினர் இத்திருநாளை கண்ணன் பிறந்த ரோகிணி நட்சத்திர நன்நாளை ஸ்ரீஜெயந்தி என்று கொண்டாடுவர். மஹா விஷ்ணுமூர்த்தி யின் அவதாரங்களுள்ளே… கிருஷ்ணாவதாரம் மிகச் சிறந்த அவதாரமாகும்.

பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

பொருள் :
தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும், தர்ம வழி நடக்கும் எளியோரைக் காக்கவும் யுகந்தோறும் அவதரிக்கிறேன்
மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் மிக மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ணாவதாரம். மக்கள் சரியாக புரிந்துகொள்ளத் தவறிய அவதாரமும் அது தான். கிருஷ்ணரின் பாத்திரத்தை பற்றி எழுதுவது சாதாரண விஷயம் அல்ல. மிக மிக கடினமான ஒரு பணியும் கூட. அவருடைய அவதாரத்தின் உண்மையான நோக்கத்திற்கும் நமது புரிதலுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை போன்றது. கேட்டதை வைத்து படித்ததை வைத்து நாமாகவே கற்பனை செய்தவை தான் அதிகம்.

 ஒரு சாதாரண சன்னியாசியின் வாழ்க்கையே இங்கே பல போராட்டங்களுக்கு உரியது என்றால் கடவுளின் வாழ்க்கை இங்கே எப்படி இருந்திருக்கும்? கண்ணன் தன் பால்ய வயதில் செய்த குறும்புகள், இளவயதில் நடத்திய விளையாட்டுக்கள், போர்முனையில் செய்த தந்திரங்கள் இவை தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் பொறுமையும் அவர் பட்ட துன்பமும் யாருக்கும் தெரியாது. கபடர்களுக்கும் சூழ்ச்சியாளர்களுக்கும் மத்தியில் அவதரிக்க வேண்டிய நிலை என்பதால், ஸ்ரீவிஷ்ணு தனது மாயா சக்தியால் இந்த அவதாரத்தையே ஒரு நாடகமாக நடத்திக் காட்டினார்.

ஜெய் கிருஷ்ணா … ஓம் சாய் ராம் …..

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #udupikrishnan #srikrishna #kannan

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அஷ்டமியில் பிறந்த கண்ணன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

Rituals To Worship Bhairav Ashtami

$
0
0
Bhairav ashtami  known as Kalashtami and therefore, considered to be an auspicious day for occult activities. It is believed that Bhairav is another form of Lord Shiva and worshipping him protects the devotee from all kind of evils and sufferings. It is one of the most difficult sadhana observed. As per the ancient scriptures, Lord Shiva appeared in the form of Bhairav on an auspicious day of Margashirsha Krishna Paksha.

By worshipping Lord Shiva in the form of Bhairavnath, one can get relief from all the sins and sufferings in his life. It is also believed that all the wishes of the devotee gets fulfilled by worshipping Bhairavnath if done with full faith and dedication. It is considered fruitful to observe fasts and worship Lord Bhairav with proper rituals on the day of Bhairava ashtami

According to the Shastras, worshipping Kalbhairav on this day gives desired results. Lord Bhairav nath has the knowledge of tantra-mantra and is himself a Rudra. Shiva Purana has mentioned Bhairav as another form of Lord Shiva. He is the one who created and nurtures the universe. The one who comes under his shelter gets relief from all the sufferings in life. Bhairavnath always protects his devotees.

Rituals To Worship Bhairav Ashtami

People should worship Lord Bhairav nath with proper rituals and full faith. Jaagran should be performed at night to worship Lord Bhairav nath. Katha and kirtans should also be performed. It is utmost important to recite Bhairav katha while performing the puja. At the middle of the night, the devotee should perform Bhairav aarti with conch, drum, gong etc. Lord Bhairav nath rides a black dog. So one should offer food to a dog to please Lord Bhairav nath. The one who performs the puja and observes a fast gets relief from all the sufferings and fears related to ghosts, evil spirits also go away.

Worshipping Lord Bhairav eliminates the negative effects of planets. The devotee is blessed with all the three kinds of tantra sadhana. Lord Bhairav destroys the occult activities such as stambhan, vashikaran, uchchatan and smohan. The person gets successful in every work performed with dedication and is protected by every kind of disease.

Significance of Bhairav Sadhana

Worshipping Lord Bhairav provides strength and protect the devotee from all kind of fears and enemies. Lord Bhairav has a special significance in hindu devas. He is considered to be the protector of the directions. It is believed that Lord Bhairav is another manifestation of Lord Shiva. He is also known as Rudra, Krodha, Unmatt, Kapali, Bheesham and Samharak.

Worshipping Bhairav provide freedom from evils, salvation, court-cases and so on. Worshipping him on Tuesdays and Sundays gives auspicious results. The person should get free form his routine work and perform the puja with pure heart. Worshipping Lord Bhairav brings peace and harmony in the family, maintains health of the family members and protects them from getting affected by various diseases

Lord Bhairav is the devotee of Lord Shiva and goddess Durga. He is of a calm, courageous and pure nature. The devotee gets freedom of bad dreams,  sufferings, fear of theft and enemies. He is also protected from the the effect of bad spirits and occult practices. Bhairava temple is Kashi has special significance in ancient scriptures. It is believed that Lord Shiva himself established Bhairav temples beside every Shakti peeth.

 Source : http://astrobix.com/

 #swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #udupikrishnan #Bhairav ashtami         

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post Rituals To Worship Bhairav Ashtami appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

கோயில் கோபுரம் உயரமாக இருப்பது ஏன்?

$
0
0

  முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?…

 கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக் கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன. நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

 இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குட முழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்? ஆச்சர்யம்தான்.

 அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது. ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே! ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் எர்த் ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்! சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000 சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது! இது ஒரு தோராயமான கணக்கு தான். இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது.

நன்றி : நம் முன்னோர்களின், மெய்ஞானமும்விஞ்ஞானமும்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #kovilgopuram        

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post கோயில் கோபுரம் உயரமாக இருப்பது ஏன்? appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

48 ஆண்டுகள் கழிந்தும் கற்பகிரஹத்தில் உள்ள வாசம் மாறாமல் இருந்தது

$
0
0

 பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான்.வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியதுதான் கல்திரை:

  கற்பகிரஹத்திர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான். இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.

 வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான். அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது. அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.

 அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்…..

 உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கற்பகிரஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!! 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது. இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #madurai       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post 48 ஆண்டுகள் கழிந்தும் கற்பகிரஹத்தில் உள்ள வாசம் மாறாமல் இருந்தது appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

மனக்கவலை தீர்க்கும் திருவலிவலம் மனதுணைநாதர்

$
0
0

 நாகப்பட்டினம் மாவட்டம் திருவலிவலம் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. சிவபெருமான் மனதுணைநாதர் அம்பாள் மழையொன்கன்னி உடன் அருள் பளிக்கிறார். இவரை தரிசனம் செய்தால் இதயம் சமந்தப்பட்ட நோய், மனகலகம் உள்ளவர்கள் வழிபட்டால் பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை. இது சிவனின் தேவரபாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 184 வது தேவரதளம் ஆகும்

கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது:

 ஒழுக்கத்தில் சிறந்த ஒருவன் இருந்தான். அவன் முன்வினைப் பயன் காரணமாக சில பாவங்களைச் செய்தான். அதனால் அவன் அடுத்தப் பிறவியில் கரிக்குருவியாக பிறவி எடுக்க நேரிட்டது. மிகச் சிறியதாக இருந்த அந்தப் பறவையை, பெரிய பறவைகள் ஒன்றுசேர்ந்து தாக்கியதால் ரத்தம் வழிந்தது. காயம் அடைந்த அந்தக் குருவி, அங்கிருந்து நெடுதூரம் பறந்து ஒரு மரத்தில் போய் அமர்ந்தது. அந்த மரத்தின் கீழ் சிவனடியார் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் தன் சீடர்கள் சிலருக்கு ஞான உபதேசம் செய்து கொண்டிருந்தார்.

சிவனடியாரின் உபதேசம்:

 அந்த சிவனடியாரின் உபதேசங்களை கரிக்குருவியும் கேட்டுக்கொண்டிருந்தது. சிவனடியார் தன் சீடர்களிடம், சிவ தலங்களில் சிறந்தது மதுரை திருத் தலம். தீர்த்தங்களில் சிறந்தது, அந்த மதுரையம்பதியில் இருக்கும் பொற்றாமரைக் குளம். மூர்த்திகளில் சிறந்தவர் மதுரை சொக்கநாதர். மதுரைக்கு சமமான தலம் இந்த உலகத்தில் வேறு இல்லை. எனவே வாழ்நாளில் ஒரு முறையேனும் மதுரை திருத்தலம் சென்று பொற்றாமரைக் குளத்தில் நீராடி, சொக்கநாத பெருமானை வழிபட்டு வர வேண்டும். அங்குள்ள சோம சுந்தரக் கடவுள் தன்னை வழிபடுபவர்களுக்கு, வேண்டும் வரங்களைக் கொடுத்து அருள்வார்’ என்றுகூறினார்.

பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியது:

  சிவனடியாரின் உபதேசத்தைக் கேட்ட கரிக்குருவி, தானும் மதுரைக்கு சென்று இறைவனை தரிசிக்க முடிவு செய்தது. அதன்படி அந்தக் கரிக்குருவி, மதுரையை அடைந்து சொக்கநாதர் கோவிலை வலம் வந்து, பொற்றாமரைக் குளத்தில் மூழ்கியது. பின்னர் அங்குள்ள இறைவனை மனமுருக வழிபட்டது. மூன்று நாட்கள் இவ்வாறு தொடர்ந்து வழிபட்டு வந்தது, அந்தக் குருவி. அதன் வழிபாட்டைக் கண்டு சொக்கநாதர் மனமிளகினார். கரிக் குருவியின் முன்பாகத் தோன்றி அதற்கு, சில மந்திரங்களை உபதேசம் செய்தார். அதனால் கரிக்குருவி சிற்றறிவு நீங்கி, பேரறிவு பெற்றது. கேலி செய்யும் நிலையில் உள்ளேன் ஞானம் பெற்ற கரிக்குருவி, ‘இறைவா! உங்களது கருணையால் நான் ஞானம் பெற்றவனானேன். இருந்தாலும் எனக்கு ஒரு குறை உள்ளது. மிகச் சிறிய பறவையான நான், மற்ற பெரிய பறவைகளால் துன்புறுத்தப்படுகிறேன். பார்ப்பவர்கள் கேலி செய்யும் நிலையில் உள்ளேன்’ என்று முறையிட்டது.

திருவலிவலம்:

  அதற்கு சிவபெருமான், ‘எல்லாப் பறவைகளையும் விட நீ வலிமையுடையவனாக மாறுவாய்’ என்று அருளினார். ஆனால் அந்தக் கரிக்குருவி, ‘சுவாமி! எனக்கு மட்டுமின்றி, எனது மரபில் உள்ள அனைவரும் வலிமையுடன் இருக்கும் வரம் தந்தருள வேண்டும்’ என்று கேட்டது. இறைவனும் அப்படியே அருளினார். இதனால் அந்தக் கரிக்குருவி ‘வலியான்’ என்ற பெயரையும் பெற்றது. வரம் பெற்றகுருவி திருவலிவலம் திருத்தலத்திற்கு வந்து மனத்துணை நாதரை வழிபட்டு முக்தி அடைந்தது. எனவே இந்த தலத்திற்கு ‘திருவலிவலம்’ என்ற பெயர் ஏற்பட்டதாக தல புராணம்தெரிவிக்கிறது.

மாடக்கோவில்:

 Manathunai-Nathar-Temple-iValivalam-Nagapattinamஆலயத்தின் இரண்டாவது பிரகாரம் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோச்செங்கண் சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம், ‘மாடக்கோவில்’ வகையைச் சேர்ந்தது. பதினாறு படிகள் ஏறிச் சென்று பார்த்தால் மூன்று நிலை விமானத்தின் உள்ளே கருவறையில், சிவலிங்க ரூபமாக மூலவர் மனத்துணை நாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இவரை இதயக்கமலேஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். ‘மனத்துணையே என்றன் வாழ்முதலே’ என்று மாணிக்கவாசகர் புகழ்கிறார். ‘அன்பருக்கு இன்னருள் செய்துய்ய வலிவலத்துச் சொன்முடியே’ என்கிறார் ராமலிங்க வள்ளலார். அப்பரோ தனது பதிகத்தில் ‘மனத்துளானே’ என்று கூறுகிறார். சுந்தரரும், ‘நல்லுடையார் மனத் தெய்ப்பினில் வைப்பை நானூறு குறைஅளித் தருள் புரிவானை’ என்று இத்தல இறைவனை புகழ்ந்துரைக்கிறார். அனைத்தையும் இறைவன் திருவடியில் சமர்ப்பித்து ‘நீயே துணை’ என்று நம்பி வந்தால், உடலும் உள்ளமும் தெளிவாகி நோய்கள் விலகுகின்றன. அந்தப் பெரும்பேற்றைத் தருபவர் தான் இத்தல நாயகர் மனத்துணை நாதர். மனதில் ஏற்படும் விரக்தி, சோர்வு ஆகியவற்றிக்கும் இத்தலத்தில் தீர்வு கிடைக்கின்றன.

‘பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம்உறை இறையே’

என்று இந்தத் திருக்கோவில் நிருதி மூலையில் எழுந்தருளியுள்ள வலம்புரி விநாயகருக்கு பாமாலை சூட்டுகிறார் திருஞானசம்பந்தர். தேவாரப் பண்ணிசைப்போர் புகழ்பெற்ற இத்திருப்பதிகத்தைப் பாடியே, மற்ற பண்களை இசைக்கிறார்கள் என்றால் இத்தலமும் அதில் எழுந்துள்ள விநாயகரும் எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். அடியவர்களின் துயர் களைய சிவசக்தியால் உருவாக்கப்பட்ட கண நாதர் இவர்.
இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில், ‘அமரர்கள் மதித்த சேவக வலிவலம் நகருறை பெருமானே’ என்று போற்றுகிறார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வலிவலத்தில் அம்பிகை ‘மழையொண்கண்ணி’ என்ற பெயரில், தெற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகை சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தவனத்தில் தலவிருட்சமான புன்னை மரம் காற்றில் அசைந்து இனிய மணம் பரப்புகிறது.

 அமைவிடம்:

  திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழித்தடத்தில் கச்சனம் உள்ளது. சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது திருவலிவலம். திருநெல்லிக்கா ரெயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும்  உள்ளது.

 தொடர்புக்கு : – 91-4366-205636

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan #manathunainaathar
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மனக்கவலை தீர்க்கும் திருவலிவலம் மனதுணைநாதர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

4448 நோய்களும் குணமாக்கும் சித்தர்கள் முறை

$
0
0

சித்தர்களின் சர்வரோகங்கள் நீக்கும் புருவமத்திசாதன முறை விளக்கம் (4448 நோய்களும் குணமாக‌):

இன்று எங்கு பார்த்தாலும் நோய், நோயின்றி வாழதலே வாழ்வின் பெரும் சிறப்பு, சித்தர்கள் கூறிய மருத்துவத்திலிருந்து இன்று நாம் பல லட்சம் செலவு செய்யும் ஆங்கில மருத்துவத்திற்கு சென்று விட்டோம்.

சித்தர்களது மருத்துவம் எளிமையானது, எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்று சொல்லிவைத்தார்கள். சித்தர்கள் மனித உடலுக்கும் அவனைச் சூழ உள்ள இயற்கையிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் உள்ள தொடர்பினை தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். உடலில் வரும் பாதிப்புகள் பஞ்சபூத சம நிலை இன்மையினால் வருவது, இந்த பஞ்ச பூதங்கள் ஸ்தூல வடிவாக உடலாக பரிணமிக்கும் அதே வேளை, சூஷ்ம உடலிலும் ஆறாதாரங்களாக பரிணமித்துள்ளது.

அவற்றின் இயல்பு வருமாறு:

பிருதிவி பூதம் – மூலாதாரம்
அப்பு (நீர்) பூதம் – சுவாதிஷ்டானம்
தேயு (தீ) பூதம் – மணிப்பூரகம்
வாயு பூதம் – அநாகதம்
ஆகாய பூதம் – விசுத்தி
மனம் – ஆக்ஞா

இதில் ஒவ்வொரு பூதத்தின் குறைபாடுகள் அந்த ஆதாரங்களின் சக்தி குறையும் போது சூஷ்ம உடலில் உருவாகி நீண்டகாலத்திற்கு பின்னர் ஸ்தூல உடலிற்கு வரும். இந்த அடிப்படையிலேயே ஒரு சித்தவைத்தியர் தனது சிகிச்சையினை செய்யவேண்டும்.
மேலே கூறிய ஐம்பூதங்களுக்கும் சூஷ்ம உடலில் உள்ள ஆதாரத்திற்கும் உள்ள தொடர்பினை பார்த்தீர்களானால் ஆறாவதான ஆக்ஞா மனத்துடன் தொடர்பு பட்டுள்ளது. மனம் என்பதே மனிதன் இந்த பிரபஞ்சத்துடன், ஐம்பூதங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய ஒரு சாதனம்.

இது திருமூலர் கூறிய ஒரு எளிய முறை தியானப்பயிற்சி; சித்தர்களின் பாகுபாட்டி மனிதனுக்கு தோன்றக்கூடிய வியாதிகள் 4448, இதற்குமேல் எந்த வியாதியும் இல்லை, இன்று ஆங்கிலப் பெயரிட்டு அழைக்கப்படும் பல்லாயிரக்கணக்கான வியாதிகளும் இவற்றுக்குள் அடங்கிவிடும். இந்தப்பயிற்சியால் 4448 வியாதிகளும் இல்லாது போய்விடும் என்பது திருமூலே வாக்கு, இந்த சாதனை பற்றிக் கூறும் பாடம் வருமாறு; (திருமூலர் ஞானக்குறி 30, பாடல் 14) ;

நாலாயிரத்தி நானூத்தி நாற்பத்தெட்டு
மாலாம் வியாதியும் மாத மடிந்திடும்
பாலாங் குழந்தையாம் பார் புருவ மையத்தின்
மூலா மனத்தை மூட்டு கண் மூக்கிலே

இதன் பொருள் வருமாறு: மனதினை கண்ணும் மூக்கும் சந்திக்கும் மூட்டில் (மூட்டு கண் மூக்கிலே) அதாவது புருவமத்தியில் வைத்து தியானித்து  4448 வியாதிகளும் மடிந்து குழந்தையைப்போன்ற இளமை தோன்றும் என்கிறார்.

இதனை எப்படி பயிற்சிப்பது?

அதிகாலை காலை 04.00 – 06.30 வரை மிக உகந்த நேரம், அல்லது மாலை 06.00 – 07.00 மணிவரை முதலில் அமைதியாக ஓரிடத்தில் முதுகலும்பு வளையாதவாறு நேராக நாற்காலி ஒன்றிலோ, அல்லது நிலத்தில் கால்மடித்து உட்காரமுடியுமானால் அவ்வாறோ இருக்கவும். அல்லது சாய்வு நாற்காலியில் முதுகினை நேராக சாய்த்தவாறும் செய்யலாம்.
பின்பு கண்களை மூடி புருவமத்தியினை நோக்கி செலுத்தவும், இது பொதுவாக நீங்கள் ஏதாவதொன்றினை ஆழமாக யோசிக்கும் போதோ கண்கள் செல்லும் நிலையினை அவதானித்தால் செய்வதற்கு இலகுவாக இருக்கும். கண்கள் வலிக்காமல் இருக்கும் நிலையே சரியான நிலை,

கண்கள் வலியெடுத்தால் நீங்கள் உங்கள் நிலைக்கு மீறி முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.

இப்படி செய்யும் போது ஆரம்பத்தில் நீங்கள் மனத்திரையில் இருளாகவும், சிறிது நாட்களுக்கு பின்னர் ஒளியும் தோன்ற ஆரம்பிக்கும். அந்த ஒளிதெரியும் நிலையிலிருந்து உங்கள் நோய் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் கீழ்வரும் வாசகத்தினை எழுதி மனப்பாடம் செய்துகொள்ளவும், ஆரம்ப நாட்களில் மறந்தால் கண்களைத்திறந்து வாசித்து மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.

எனது நோய் பிரபஞ்ச சக்தியின் ஆற்றலால் குணமாகப் போகிறது, குணமாகிக்கொண்டு வருகிறது, குணமாகி விட்டது, இந்த வாசகங்களை உச்சரிக்கும் போது அது நடக்கும் போது சூழல், உடல் எப்படி இருக்குமோ அதனை மனக்கண்ணில் பார்த்து வரவும். நாட்பட்ட புற்று நோய், நீரிழிவு போன்ற வியாதிகளுக்கு தொடர்ச்சியான 40 நாட்கள் பயிற்சியின் பின்னர் நிச்சயமாக உங்கள் உடல் நிலையில் முன்னேற்றம் காண ஆரம்பிக்கும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sidhar

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 4448 நோய்களும் குணமாக்கும் சித்தர்கள் முறை appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம்

$
0
0

ருத்ராக்ஷத்தை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராக்ஷங்கள் உள்ளன.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராக்ஷங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராக்ஷத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம் ;

1. அஸ்வினி – ஒன்பது முகம்.

2. பரணி – ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை – பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி – இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் – மூன்று முகம்.

6. திருவாதிரை – எட்டு முகம்.

7. புனர்பூசம் – ஐந்து முகம்.

8. பூசம் – ஏழு முகம்.

9. ஆயில்யம் – நான்கு முகம்.

10. மகம் – ஒன்பது முகம்.

11. பூரம் – ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் – பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் – இரண்டு முகம்.

14. சித்திரை – மூன்று முகம்.

15. ஸ்வாதி – எட்டு முகம்.

16. விசாகம் – ஐந்து முகம்.

17. அனுஷம் – ஏழு முகம்.

18. கேட்டை – நான்கு முகம்.

19. மூலம் – ஒன்பது முகம்.

20. பூராடம் – ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் – பனிரெண்டு முகம்.

22. திருவோணம் – இரண்டு முகம்.

23. அவிட்டம் – மூன்று முகம்.

24. சதயம் – எட்டு முகம்.

25. பூரட்டாதி – ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி – ஏழு முகம்.

27. ரேவதி – நான்கு முகம்

அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராக்ஷத்தை அணிந்து பயன் பெறுங்கள்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan # natchatrangal #rudraksham
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 27 நட்சத்திரங்களுக்கான ருத்ராக்ஷம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


பாப விமோசனம் அருளும் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்

$
0
0

பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்.

ஸ்தல வரலாறு:

இறைவன் வாசம் செய்யும் நல்லூர் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள இளவரசனார்கோட்டையில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகைப் படைத்து இவ்வுலகோர்களை வாழ்விக்க எண்ணங்கொண்டு நவகோடி நாராயண ஷேத்ரங்களில் கோயில் கொண்டு அருள் பாவிக்கிறார். அவற்றுள் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற சிறப்புடைய 108 திவ்ய தேசங்களாகும். அத்திவ்ய தேசங்களில் நடுநாட்டுத் திருப்பதிகள் சீரிய சிறப்புடையவை. அவற்றிலும் முதலாழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலில் அவதரித்த திருக்கோவிலுமே அத்திருக்கோயிலூரின் தெற்குப் பாகத்தில் அமைந்ததுள்ள இராஜநாராயண விண்ணகரமேயாகும். பழங்காலத்தில் இத்திருத்தலம் சோழ கேரள சதுர்வேதி மங்கலம். சோழ கேரள நல்லூர் பிடாகம், இறைவாச நல்லூர் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றது. இன்று இத்தலம் எலவானசூர்கோட்டை என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

????????????????????????????????????

ஸ்ரீ ராஜ நாராயண விண்ணகராகிய இத்தலம் முதலாம் குலோத்துங்கசோழனின் சிறப்புப் பெயரான ராஜநாராயணன் என்ற பெயரில் ஸ்ரீராஜ நாராயண விண்ணகராக காட்சியளிக்கிறார்.

இத்திருமால் கோவிலிலும் அவர் பெயரால் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை நிர்மானிக்கப்பட்டது. முற்காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோவிலில் “சீரார் திருவேங்கடமே திருக்கோவிலூரே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளது திருவேங்கடமுடையாளே இங்கு ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்டுள்ளார். இராஜநாராயண விண்ணகரத்தாழ்வாருக்கும் பிற்காலத்தில் வேங்கடபதிராயரால் நிலர் கொடைகள் வழங்கப்பட்டு பரிபாலிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வந்த இக்கோயில் காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் பழுதடைந்து தரைமட்டமாகிவிட்டது. கடந்த 04.12.2008 அன்று பெருமாள் கோவில் கட்ட பூமி தேவி பூஜை செய்தபோது பூமிக்கு அடியில் ராஜகோபுரத்தின் அடிபீடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த எழுத்துக்களை ஆராய்ந்தபோது ஸ்ரீராஜ நாராயண விண்ணகர் என்ற பெயர் காணப்பட்டது. அதன்படியாக இக்கோவில் நிர்மானத்தை திருக்கோயிலூர் ஸ்ரீமந் எம்பெருமானார் ஜியர் மடாதிபதி சஸானரனூர் மஹாத்மா ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி ஆதயேளி 09.01.2009 அன்று துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்கள். அதன்படியாக திருப்பணிகள் கருவறை விமானம், மஹாமண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவை முதல் கட்டமாக நிறைவு செய்யப்பட்டது. 19.06.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

sri-narayan-300x169

இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்கள், செல்வ வளம், திருமணம், புத்திர பாக்கியம், உயர்பதவி, பாவ விமோச்சனம் நீங்கி செல்கின்றனர்.
மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி ராஜநாராயண பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.

அமைவிடம் : விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 10வது கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.

#swasthiktv.com #swasthiktv #spiritual #spiritualwebtv #devotional #devotionalwebtv #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #spirituality #spiritualgrowth #pambanswamigal #mayurabandham #lordmurugan #villupuram #hinduspiritual #spiritualpractice #rajanarayanaperumal #pabavimochanam

 

whatsapp   For Daily Devotional News Update WhatsApp to +91-81245-16666

The post பாப விமோசனம் அருளும் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

$
0
0

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள் , அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது , பொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது , இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan #27stars #natchathirangal #27natchathirangal #rasi #gayathrimantra
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post 27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம்

$
0
0

சென்னை : நாம்  பாம்பன் ஸ்வாமிகள் அருளிய காலசர்ப்ப தோஷம் போக்கும் துவித நாக பந்தத்தை பற்றி பார்த்தோம், இந்த பதிவில் நாம் ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தத்தை பற்றி தெரிந்துகொள்வோம். 

மயூர பந்தம் என்பது பகை விலக, மாந்திரிக, தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது. பொதுவாகவே முருக பக்தர்களை பில்லி, சூனியம், ஏவல் போன்றவை தீண்டாது , அதிலும் ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தத்தை ஒருவர் வீட்டில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் அவர்களை இந்த மாந்திரீக ஏவல்கள் அறவே அண்டாது என்பது உறுதி.

“வரதந திபநக ரகமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு முனிவருதி “

ஸ்வாமிகள் எழுதிய மயூர பந்தமானது சகல பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது, இந்த மந்திரத்தை மிகவும் கவனமாகவும் சுத்தமாகவும் பாராயணம் செய்துவந்தால் அணைத்து பிரச்சனைகள் மற்றும் தோஷங்களிருந்து விடுபடமுடியும்  என்பது ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாக்கு. இந்த ஸ்லோகத்தை பாராயணம்செய்யும் நாட்களில் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும், ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டும் அப்படி செய்து வந்தால் அணைத்துபிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நல்ல ஒரு வாழ்க்கை அமைத்து கொண்டு எல்லா காரியங்களிலும் வெற்றியை காணலாம்.

முருகனுக்கு உரிய நாள் செவ்வாய்க்கிழமை என்பதால் இந்த மந்திரத்தை அன்று தொடங்கி பாராயணம் செய்வது சிறந்ததாகும். இந்த மந்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது மது பழக்கம், புகை பழக்கம் மற்றும்  அசைவ உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகள் கோவில் சென்னையில் உள்ள திருவான்மியூரில் அமைந்துள்ளது , பக்தர்கள் இங்கு சென்று ஸ்வாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து பலன் பெறலாம்.

பக்தர்களுக்காக மேலே மந்திரத்துடன் ஸ்வாமிகள் படம்

http://bit.ly/2bFRUdm

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post மாந்திரீகத்தை தடுக்கும் வல்லமை படைத்த ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் மயூர பந்தம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி மந்திரம்

$
0
0

18 சித்தர்களுக்கும் நம் வாழ்க்கை  முறைகளுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு , ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யோகா பயிற்சிமுறை , சூர்யநமஸ்கரம், உணவு பழக்க வழக்கங்கள் , தெய்வ வழிபாடுகள், குரு வழிபாட்டுமுறை போன்ற இன்னும் பல தொடர்புகள் நாம் அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் கொண்டுவர முயற்சிசெய்துகொண்டிருக்கிறோம்,

இப்படிப்பட்ட 18 சித்தர்களில் ஒருவர் தான் பதஞ்சலி சித்தர் ஆவார், இவரை மகரிஷி பதஞ்சலி என்று அழைப்பார்கள் , இவர் விஷ்ணுவின் படுக்கையான (சர்ப்பம்) ஆதிஷேசனின் அம்சமாக திகழ்கிறார். ஒருமுறை சிவன் ருட்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது ஆதிசேஷனால் அந்த அதிர்வுகளை தாங்கிக்கொள்ள முடியாமல் திருமாலின் படுக்கையை அசைக்க தொடங்கியது , அப்பொழுது திருமாலிடம் ஆதிசேஷன் இந்த அதிர்வுகளை பற்றியும் சிவனின் ருட்ரதாண்டவத்தை பற்றியும் கேட்டார், அதற்கு திருமால் சிவனின் யோக பயிற்சி முறையே இந்த அபார சக்திக்கு காரணம் என்று கூறினார், மேலும் யோக பயிற்சி நினைத்ததை முடித்து வைக்கும் வல்லமைபடைத்தது என்றும் கூறினார். இதனால் ஆதிசேஷனும் தாம் யோக வல்லமையை கற்க வேண்டும் என்று பிற்காலத்தில் பதஞ்சலியாக பிறந்தார் என்பது சித்தர்கள் குறிப்பு.

இப்படிப்பட்ட பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்த்ரிரத்தை நாம் தினமும் பாராயணம் செய்து வழிபட்டால் அனைத்து காரியங்களும் கைகூடும் என்பது சித்தர்களின் வாக்கு , மேலும் இந்த காயத்ரி மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே ஒன்பது கோடி முனிவர்களும் தேவர்களும் அருள்புரிவார்கள்.

பதஞ்சலி சித்தரின் காயத்ரி மந்திரம் :

 “ஓம் சிவதத்வாய வித்மஹே
யோகாந்தராய தீமஹி
தந்நோ பதஞ்சலி குரு ப்ரசோதயாத்.”

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan  #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan #27stars #natchathirangal #27natchathirangal #rasi #gayathrimantra
       

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி மந்திரம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

இருபத்தியேழு ( 27) நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

$
0
0

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்கள் , அந்த வகையில் 27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்ரி மந்திரத்தை இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது , பொதுவாகவே ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது , இதுபோன்ற மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது நமக்கு விளையும் தீமைகளானது குறையும் என்பது பெரியோர்களால் நமக்கு சொல்லப்பட்டது.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

அஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #thiruvalivalam #sivan #srimatpambanswamigal #mayurabandham #thiruvanmiyur #pambanswamigal #lordmurugan #27stars #natchathirangal #27natchathirangal #rasi #gayathrimantra

 

Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post இருபத்தியேழு ( 27) நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அணைத்து தடைகளையும் நீக்கும் புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரம்

$
0
0

தசாவதாரத்திலேயே உக்கிரமான அவதாரம் நரசிம்ம அவதாரம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே , நரசிம்மர் தோன்றியதற்கு காரணமே ஹிரண்யகசிபு என்ற ஒரு துர் சக்தியை வதம் செய்வதிற்காகத்தான், எந்த ஒரு காரியத்தில் தடை ஏற்பட்டாலும் அதை நீக்க கூடிய வல்லமை நரசிம்மருக்கு உண்டு, அணைத்து துர் தேவதைகளையும் நம் வாழ்வில் அண்டவிடாமல் பாதுகாக்கும் சக்தி எதுவென்றால் அது நரசிம்மராகத்தான் இருக்க முடியம் என்பதில் எந்தவித மாற்று கருதும் இருக்க முடியாது  என்று சொல்லலாம்,

இந்த தெய்வத்தை வணங்குவதால் நமக்கு  எல்லாவிதமான  தடைகளும் துர் சக்திகளின் தீவினைகளும்  நம்மை விட்டு நீங்கும் , இதை நித்தமும் அனுபவத்தால் உணர்தவர்கள் நம்முள் பலர். இப்படி பட்ட நரசிம்மரின் ஸ்லோகத்தை நமக்காக அருளியுள்ளார் புலிப்பாணி சித்தர். இந்த ஸ்லோகத்தில் நாம் அனைவரும் படித்து  பயன்பெறுவோம்.

“பாரடா நரசிங்கஞ் சொல்லுக் கேளு
பாங்காக ஓம் சிங்கமுகாவா ஓம் ஓம்
கூறடா பிடித்து கடித்தொடுத்து சுற்றிக்
குணமாக கண்டுபிடித்த தறிவாரைப் போல்
தீரடா பிசாசுபேய் பொடிபட் டோடத்
திரமாக நரசிங்க ராஜா வானை
சீரடா ஸ்ரீம் கிலீம் சுவாஹா வென்று
சிறப்பாக லட்சமுரு ஜெபித்துத் தீரே
ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் நரசிங்க
ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா”

                                               – புலிப்பாணி ஜாலத்திரட்டு 81

நரசிங்க மந்திரத்தின் சிறப்பை சொல்லுகிறேன் கேட்பாயாக. ஓம் சிங்கமுகவா ஓம் ஓம் ஜபித்தபடி சத்தத்துடன் பிசாசு, பேய் பொடிபட் டோட நரசிங்க ராஜா ஆணை ஸ்ரீம் கிலீம் சுவாஹா என்று இலட்சமுறை ஜெபிக்கவும் இதனால் பேய் பிசாசு பிடித்திருந்தால் ஓடிவிடும்.

“காணவே ஓம் சர்வாப்தா நாதா
கனிவாக ஓம்படு சுவாஹா வென்று
வானவே லட்சமுரு செபித்துத் தீரு
வளமான தர்ப்பணமும் மோமான்னங்
கோணாமற் பூசையது பெலத்தச் செய்நீ
குணமாகச் சாமமது சித்தியாகும்
நாணாது நினைத்தபடி யெல்லாஞ் செய்யும்
நாயகனே பிசாசுமுதற் பூதம் போமே.”

                            – புலிப்பாணி ஜாலத்திரட்டு 82

ஒம் சர்வ ஆபத்துரு நாதா ஒம் படு சுவாஹா என்று இலட்சம் தடவைகள் ஜெபிக்கவும். பின்னர் தர்ப்பணம்,ஹோமம், அன்னதானம், பூசை இவைகளைச் செய்யவும். இதனால் ஒரு சாம நேரத்தில் நினைத்தக் காரியங்கள் கைகூடி சித்திக்கும் மற்றும் பிசாசு முதல் பூதம் வரை ஒடிப்போய் விடும்.

ஒரு சாமம் என்பது மூன்று மணி நேரம்

The post அணைத்து தடைகளையும் நீக்கும் புலிப்பாணி சித்தர் அருளிய நரசிம்ம மந்திரம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அட்சர பீடங்களின் காவலன்

$
0
0

 அந்தகாசுரன் எனும் அசுரன் சிவபெருமானிடம் பெற்ற வரத்தால் ஆணவம் கொண்டு, தேவ முனிகளை வதைத்தான். தேவர்களைப் பெண் வேடமிட்டு சாமரம் வீசும் ஏவலைச் செய்யும்படி பணித்தான். அந்தகாசுரன் சிவனிமிருந்து இருள் என்ற பெரும் சக்தியைப் பெற்றமையால், உலகை இருள்மயமாக்கி ஆட்சி செய்தான். தேவர்களும், முனிவர்களும் அவனை அழிக்க சிவனிடம் வேண்டினார்கள்.

தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவர மூர்த்தியாக சிவன் மாற்றினார். எட்டு திசைகளிலும் இருந்த இருளை நீக்க எட்டு பைரவர்கள் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.பைரவ மூர்த்தியை மூர்த்தி, பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன்,நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்களின் வணங்குகிறார்கள்.அட்சர பீடங்களின் காவலன்சிவபெருமானை பிரிந்த ஆதி சக்தி பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சன் மகளாக பிறந்தார். அவர் தாட்சாயினி என்றும் சதி தேவிஎன்றும் அறியப்பட்டார். பருவ வயதில் சிவபெருமானின் மீது காதல் கொண்டு, தட்சனின் விருப்பமின்றி திருமணம் செய்து கொள்கிறார்.

 ஆணவம் கொண்டிருந்த பிரம்ம தேவரின் தலையை கொய்து பூசையின்றி போக சாபம் அளித்தமையினால் சிவபெருமான் மீது பிரம்ம குமாரனான தட்சன் கோபம் கொண்டிருந்தார். அதனால் சிவபெருமான் தாட்சாயினிக்கு அழைப்பு அனுப்பாமல் யாகமொன்றை தொடங்குகிறார்.

 அந்த யாகத்தீயில் சதிதேவி விழுந்து மறிக்கிறார்.சிவபெருமான் சதிதேவியாரின் பூத உடலோடு அழைவதைக் கண்ட திருமால், சிவபெருமானை அந்த மாயையிலிருந்து அகற்றுவதற்காக சக்ராயுதத்தினால் திருமால் அவ்வுடலை தகர்த்தார்.

 சதி தேவியாரின் உடல்கள் பல்வேறு பாகங்களாக பூமியில் சிதருண்டது. அவ்வாறு சிதருண்ட சதிதேவியின் உடல் பாகங்களை சிவபெருமான் சக்தி பீடமாக மாற்றினார். தாராகாசுரன் போன்ற அரக்கர்களிடமிருந்து சக்தி பீடங்களையும், அங்குவரும் பக்தர்களைக் காக்கவும் ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் ஒரு பைரவரை காவல் தெய்வமாக நியமனம் செய்தார்.

The post அட்சர பீடங்களின் காவலன் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.


வினாயகருக்கும், அகத்தியருக்கும் சிவ பெருமான் தனது திருமண கோலத்தை காட்டிய திருத்தலம்

$
0
0

நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டான்  அடுத்துள்ள நனிப்பள்ளி உள்ளது  2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது..

 இங்கு சிவ பெருமான்  நற்றுணையப்பர் உடன் பருவதராஜ புத்திரி என்ற பெயரில் சிவ பெருமான்   அருள் பாலிக்கிறார் இவரை வணங்கினால் திருமணத் தடை நீங்கும், குழந்தைகளுக்கு கல்வி வள்ர்ச்சி பெரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை….. சிவபெருமானின் தேவார பாடல் பெற்ற 274-சிவாலயம்  சிவாலயங்களில் இது 106 – வது  தேவார தலம் ஆகும்

திருஞானசம்பந்தர். மீண்டும் அந்த நிலத்தை மருதநிலமாக மாற்றினார்

 திருநனிபள்ளி என்னும் புஞ்சை (பொன்செய்) சமணர்பள்ளிகள் இங்கு மிகுதியாகக் காணப்பட்டதால். நனிப்பள்ளி எனப் பெயர் வந்தது இத்தலத்திற்கு, கிடாரங்கொண்டான் புஞ்சை என்று தற்போது அழைக்கப்படும் இவ்வூேர திருஞானசம்பந்தரது தாயார் பகவதியம்மை பிறந்த தலமாகும் சீர்காழியில் அன்னை உமாதேவியிடம் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் அப்பன் ஈசனிடம் பொற்றாளம் பெற்ற பின்னர், திருநனிப்பள்ளி அடியார்களின் அழைப்பிற்கு இணங்கி, தந்தையின் தோள் மீதமர்ந்து இங்கு வந்து இறைவன் மீது பதிகம் பாடி, பாலையாக இருந்த நிலத்தினை நெய்தல் நிலமாய் மாற்றினார் திருஞானசம்பந்தர். மீண்டும் அந்த நிலத்தை வளமிகு மருதநிலமாக மாற்றினார்.

இறைவன் விரும்பி உறையும் இடம்:

 சம்பந்தர் மட்டுமல்லாது, அப்பரும், சுந்தரரும் இத்தலம் மீது பதிகம் பாடிப் போற்றியுள்ளனர். இயற்கை வளம் நிறைந்த இப்பதி, இறைவன் விரும்பி உறையும் இடமென்றும், இதுபோன்ற காதல் நகர் கீழுலகிலும், மேலுலகிலும் இல்லை என்றும் பாடிப் பரவசப்படுகின்றார் சம்பந்தர். தனது அடியவரை நரகத்தில் விழாது காக்கும் நற்றுணையப்பர் விளங்கும் நனிப்பள்ளியென்றும் தொன்னூற்று ஆறு தத்துவங்கள் அடங்கிய உடம்பினைக் கொண்டு ஈசனை உணராத நம்மை எண்ணி வருந்தியும் பகர்கின்றார், அப்பர், சுந்தரர். நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழாரும் இத்தலத்திற்கு சம்பந்தரோடு கூடிய தொடர்பினை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர்.

 சோழப் பேரரசான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்று கங்கை கொண்ட சோழீச்சுரத்தை அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். ‘‘கெடா’’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘‘கடாரம் கொண்ட சோழீச்சுரம்’’ என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு ‘‘பூர்வ தேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’’ என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது! கடாரம் கொண்டான் என்பதே மருவி கிடாரங்கொண்டான் ஆகிவிட்டது. அதியற்புத சிற்ப வேலைபாடுகள் கொண்ட பிரமிக்க வைக்கும் பிரமாண்ட விமானத்தை தன்னகத்தே கொண்டு தனித்துவப் புகழுடன் விளங்குகின்றது. இந்த நனிப்பள்ளி சிவாலயம். இங்கு காணப்பெறும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்களின் சிற்பக் கலைத் திறத்தை உலகிற்கு பறை சாற்றுகின்றது.

பார்வதி, பரமேஸ்வரனின் கல்யாண காட்சி:

 அகத்தியர் இங்கு பார்வதிபரமேஸ்வரனின் கல்யாண காட்சியைக் கண்டுள்ளார். காகம் ஒன்று இத்தல சொர்ண தீர்த்தத்தில் நீராடி, பொன்னிறமானதாக வரலாறு. ஊரின் நடுவே ஓங்கிய மதில்களுடன் ஒய்யாரமாய் ஒளிர்கின்றது திருக்கோயில். முதல் வாயிலின் மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம். முன்னே கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. இங்கே இரு அம்மன் சந்நதிகள் உண்டு. முதல் சந்நதி முன், மண்டபத்தின் இடப்புறம் தெற்கு முகமாக அமைந்துள்ளது. இந்த அம்மனை கல்யாண ஈஸ்வரி என அழைப்பர். இந்த முக மண்டபத்தின் இரு பக்கமும் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் மூன்று விநாயகர் சிலைகள், சூரியன், நால்வர், ராகு, பைரவர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலர், ரதேஸ்வரர், கிழக்கு முகமுள்ள தனி சனீஸ்வரர் ஆகிய சிலாரூபங்கள் நிறுவப்பட்டுள்ளன. அடுத்ததாக மகா மண்டபம்! இங்கு அழகிய தூண்கள் பல எழுந்து, பிரமாண்டத்தை வெளிப்படுத்துகின்றன.

கர்ப்பகிரகம் ஒரு யானை வலம் வரும் அளவிற்கு:

கர்ப்பகிரகம் மிகவும் விசாலமானது. ஒரு யானை வலம் வரும் அளவிற்கு உட்பரப்பு அதிகமுடையது. அதன் நடுநாயகமாக லிங்கத் திருமேனி கொண்டு நமக்குப் பேரருள் புரிகின்றார், நற்றுணையப்பர். இவரை வணங்கி, பிராகார வலம் வருகையில் தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. அதற்கடுத்தார்போல் தெற்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியப்படி அம்பாள் சந்நதியுள்ளது. அருகே அம்பாளுடன் கூடிய கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது. அம்பாள் இங்கே ஸ்வாமிக்கு எதிராக மாலை மாற்றும் கோலத்தில் வீற்றிருக்கின்றாள். அம்பாள் இங்கு மலையான்மடந்தை என்ற பெயரை தாங்கி கருணை புரிகின்றாள். பர்வதபுத்ரி என்றும் அழைக்கப் பெறுகின்றாள். மேற்கில் கிழக்கு முகம் கொண்ட கணபதி சந்நதியும், வள்ளி- தெய்வானையுடனான கந்தன் சந்நதியும் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் மிகவும் பிரமாண்ட அமைப்புடையது.

கம்பீரமாய் துர்க்கை:

அகத்தியர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை என ஆறு தெய்வ சிலைகள் இங்கே காணப்படுகின்றன. துர்க்கை மிகக் கம்பீரமாய் ஒரு கரத்தால் அபயம் அளித்தும், மறுகையை இடுப்பில் மடித்தும், கால்களை சற்றே மடக்கியவாறும், மிகுந்த கலை வடிவினளாய் கருணை பொழிகின்றாள்.

இத்தலத்தின் விருட்சம் செண்பகம் மற்றும் புன்னை தீர்த்தம் – சொர்ண தீர்த்தம். முன்வினைக் காரணமாக முன்னேற்றம் இன்றி தவிப்போர் இங்கு வந்து வழிபட நன்மையுண்டாகும். திருமணத் தடை நீங்கும்.

அமைவிடம்:

நாகை மாவட்டம், திருவெண்காடு செல்லும் வழியில் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது

தொடர்பு கொள்ள  :  91-4364-283188

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post வினாயகருக்கும், அகத்தியருக்கும் சிவ பெருமான் தனது திருமண கோலத்தை காட்டிய திருத்தலம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

தடைகளை தகர்த்தெறியும் ஈச்சனாரி விநாயகர்

$
0
0

 கோவை மாவட்டம் மேலச்சிதம்பரம் என்ற ஊரில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த  கோவில் உள்ளது. இங்கு விநாயகர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். இவரை வணங்கி வேண்டிக்கொண்டால் எடுத்தகாரியம் தடங்கள் இன்றியும், குழந்தைக் கல்வி, கோள்விகளில் சிறந்து விளங்குவதாகவும் படிப்பில் மிக உயர்ந்த நிலை அடைவதாகவும் இங்கு வரும் பக்தர்களின் தீராத நம்பிக்கை.

வேத மந்திரங்களின் தலைவன்:

 விக்னங்களை அதாவது வினைகளை நமக்கு ஏற்படும் கவலைகளை களைபவர் விநாயகர். அனைத்து காரியங்களிலும், விநாயகரைத் தொழுது தொடங்கிட எல்லை இல்லா ஆனந்தம் நல்கிடுவார் என்பது உறுதி. இவர் வேத மந்திரங்களின் தலைவன் என போற்றப்படுவர். முழு முதற்கடவுள், பிரணவ மந்திரத்தின் உட்பொருளானவர். இந்த கோவில் விநாயகர் 6 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்டவர். கோவை அருகிலுள்ள, மேலச்சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருத்தலத்திற்கு பிரதிஷ்டை செய்ய உருவாக்கி, மதுரையிலிருந்து மாட்டு வண்டியில் எடுத்து வந்தனர்.

விநாயகர் அமர்ந்து விட்டார் அகற்ற முடியவில்லை:

 இந்த இடம் வந்தவுடன் வண்டியின் அச்சு முறிந்து சரிந்துவிட்டது. இந்த இடத்திலேயே விநாயகர் அமர்ந்து விட்டார். எவ்வளவு முயற்சி செய்தும் அகற்ற முடியவில்லை. பின்பு காஞ்சி சங்கராச்சார்யார் சுவாமிகளை அணுகிய பொழுது விநாயகரை இங்கேயே பிரதிஷ்டை செய்யுங்கள், என்று அருள்வாக்கு கூற, ஈச்சனாரி விக்னேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கலானார்.

27 நட்சத் திரங்களுக்கும் 27 வித மலர் அலங்காரங்கள்

 mukkaniஅதிகாலை 5 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும் இடைவெளி இன்றி தொடர்ந்து இத்திருத்தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும், கணபதி ஹோமம் கட்டளைதாரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும். இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும். மண வாழ்க்கை அமைவது நிச்சயம் மேலும் தினமும் நடைபெறும் பூஜைக்கு வேண்டிய அனைத்து பொருட்களும், அதாவது, பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திருநீறு மற்றும் மின் கட்டணங்களும் கட்டளைதாரர்களே செலுத்தி வருவது சிறப்பான அம்சமாகும். இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி. தொழிலில் நல்ல முன்னேற்றம், விவசாயத்தில் அதிக மகசூல், நினைத்தபடி திருமண வாழ்க்கை கிடைப்பதும் நிச்சயம் என்கின்றனர், இதை அனுபவித்து உணர்ந்தவர்கள், பலனை அடைந்தவர்கள் தங்கள் நேர்த்தி கடனை, பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.

 இங்கு தினமும் 150 பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு ஏழை எளியவர்களுக்கு திருமணம் எந்தவித தொகையும் பெறாமல் நடத்தப்படுகிறது. தங்க ரதம் ஒன்று தயார் செய்து, தங்க தேர் நேர்ச்சையும் நடைபெறுகிறது. வாகன பூஜைக்கு பெயர்பெற்ற ஆலயம் இது. குடும்பப் பிரச்சினைகளை நினைத்து வருபவர்கள் ஈச்சனாரி விநாயகரை தரிசித்தபின் சுமைகளை இறக்கி சுகமாக வீட்டுக்குச் செல்வர் என்பது கண்கூடு. தட்டு காணிக்கைகளை தனி உண்டியலில் போட்டு, சதவிகித அடிப்படையில் பகிர்ந்து கொள்கின்ற பண்பு வேறெங்குமில்லாத சிறப்பம்சம். அவரவர் நட்சத்திர நாளில் இங்கு வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். ஜாதகம் இல்லாதவர்கள் தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப் பிறப்பு, சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற நாட்களில் தரிசனம் செய்தால் பன்மடங்கு பலன் உண்டாகும்.

அமைவிடம்:

  கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையில் உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில்.

தொடர்புக்கு : 91-422-2672000, 2677700.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #ganesha #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

 

The post தடைகளை தகர்த்தெறியும் ஈச்சனாரி விநாயகர் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

சிவன் காலையில் பச்சை நிறத்துடன் மாலை பொன் நிறத்துடன் மாறும் அதிசயம்

$
0
0

 விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்துள்ள பணைமலையில் 2000 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. தாளகிரீஸ்வரர் அஸ்த தாளாம்பிகை உடன் இங்கு அருள் பாலிக்கிறார் இவரை வனங்கினால் திருமணம், குழந்தைபாக்கியம், கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நிறம் மாறூம் தாளகிரீஸ்வரர் கோவில் காலையில் பச்சை நிறம் மாகவும் மாலை பொன் நிறம் மாக மாறும் அதிசயம் பனைமரங்கள் நிரம்பிய மலையாக இருந்த இத்தலம் பனைமலை என்று வழங்கப்படுகின்றது. ஆனால், இவ்வூரை மலைகள், குன்றுகள் சூழ்ந்துள்ளன. அவை உருண்டைக் கற்களை குவித்து வைத்ததுபோல், ஒரே கல்லால் மிகவும் பருத்தும், பெரியதாகவும், உயர்ந்தும் காணப்படுவதால், இதனைப் ‘பணைமலை’ என்றே குறிப்பிடுகின்றனர். குடைவரைக் கோயில்களையும், ஒற்றைத் தளி என்கிற கற்கோயில்களையும் உருவாக்கியவன் மன்னன் மகேந்திரவர்மன் ஆவான். மலையடிவாரத்திலுள்ள குகையினுள் உள்ள கொற்றவை தெய்வத்தை ராஜசிம்மன் ஏற்படுத்தி வழிபட்டு வந்திருக்கிறான்.

துர்க்கை, மகிஷாசுரமர்த்தினி :

  அக்குகைக் குன்றில் பல்லவ மன்னன் ராஜசிம்மனைப் பற்றிய வாழ்த்துரை ஒன்று, பல்லவர் காலக் கல்வெட்டாய்க் காட்சியளிக்கின்றது. இது துர்க்கைக் கோயில் என வழங்கப்பட்டு, மக்களால் நாளும் வழிபாடு செய்யப்படுகின்றது. அடிவாரத்தில், வலதுபுறமுள்ள குன்றில் விநாயகரின் உருவம் புடைப்புச் சிற்பமாக விளங்குகிறது. இவர் மகுடம், அங்குசம், பாசம் யாவும் சாய்வான மலையில் செதுக்கப்பட்டுள்ளதால் சற்று வித்தியாசமாகத் தோற்றமளிக்கின்றன. இந்த விநாயகர் தம் இரண்டு கால்களையும் குத்திட்டு அமர்ந்துள்ள பாவனையில் திகழ்கிறார். இடதுபக்கம் சிலபடிகள் ஏறிச் சென்றால் குகை போன்ற அமைப்பை அடையலாம். நுழைவிலேயே பலிபீடம், யானை, சூலம் ஆகியவை காணப்படுகின்றன. இக்குகைக் கோயிலிலுள்ள இறைவியை துர்க்கை, கொற்றவை, மகிஷாசுரமர்த்தினி என்று போற்றி மக்கள் வழிபடுகிறார்கள்.

 அன்னை, தலையில் ராசகிரீடம் புனைந்து எட்டுத் திக்குகளையும் எட்டுக் கரங்களாகக் கொண்டு, இடது மேல் கரத்தில் தண்டம் (வில்) பிடிக்க, மற்ற கைகள் சங்கம், கேடயம் ஏந்தியும், நான்காவது கை தண்டத்தை அணைத்தவாறு அன்னையின் இடது தொடைமீது படிந்துள்ளது. சிம்மத்தின் மீது தன் இடதுகாலைத் தூக்கி வைத்தும், வலது காலைத் தரையில் ஊன்றியும், வெற்றிக்களிப்புடன் காட்சியளிக்கிறாள். அம்மனின் வலது மேற்கைகள் சக்கரம், பெருவாள் பிடித்தும், ஒரு கை கடக முத்திரையோடும், மற்றொரு கையைத் தன் இடைமீது கடிகஸ்தமாகவும் வைத்திருக்கிறாள். காதுகளில் தடித்த குழைகளும், கழுத்தில் மங்கல அணியும், மேற்கையில் தோள்வளையும், மார்பில் மேலிருந்து கீழாக நூலாடையும், முன்கையில் கைவளையும், இடையில் கச்சையும், இடையின் முன் இடைவாரும், பக்கங்களில் ஆடையும், காலில் பாதசரமும் கொண்டிருக்கிறாள். அம்மனைத் தாங்கும் சிம்மம், முன்பக்க இடது காலைத் தரையில் ஊன்றி, முன் வலது காலை மேலே தூக்கிச் சற்றே சாய்ந்த நிலையில், கம்பீரமாகச் சிலிர்த்தெழுவதுபோலக் காட்சியளிக்கின்றது.

கோயில் அமைப்பு:

 கோயிலின் தெற்கு மண்டபம் கம்பீரமாக வரவேற்கின்றது. உண்ணாழி (கர்ப்பக்கிரகம்), அர்த்த மண்டபம், முன்மண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று மண்டபம், சிற்றாலயங்கள் என்று இக்கோயில் அமைந்திருக்கிறது. தூண்கள் கீழ்ப்புறம் செவ்வக வடிவிலும், மேற்பகுதி சதுர வடிவிலும் இடைப்பகுதி சதுரம், பட்டைகள் கொண்டு நிற்கின்றன.ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் உள்ளன. வடக்கே 18 தூண்களும் கிழக்கே 10 தூண்களும் மண்டபத்தைத் தாங்குகின்றன. பிற்காலச் சோழர்கள் உருவாக்கிய மண்டபங்கள் இவை. தூண்களில் விநாயகர், ரிஷபாருடர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சுற்று மண்டபத்தின் ஈசான்ய மூலையில் தெற்கு நோக்கிப் பைரவர் சிலையும், மேற்கு நோக்கிச் சூரியன் சிலையும், நடுவில் நவகிரகங்கள் அமைந்த மேடையும் காணப்படுகின்றன. கிழக்குச் சுற்று மண்டபத்தில் இறைவனைப் பார்த்த நிலையில் பலிபீடம், நந்தி உள்ளன. கொடி மரத்திற்குரிய துவாரம் மேல்தளத்தில் காணப்படுகின்றது. ராஜ சிம்ம பல்லவன் கட்டிய அருள்மிகு குன்றுடை(றை) நாதர் சிவன் கோயில், முன் மண்டபத்திலிருந்து தனித்துக் காணப்படுகிறது. இறைவனைக் காண அர்த்தமண்டபம் நுழைவதற்கு ஏதுவாக, முன் மண்டபத்திலிருந்து இணைப்பாக நான்கு கருங்கல் பலகைகள் பாவப்பட்டிருக்கின்றன.

அஸ்த தாளாம்பிகை:

 இறைவனார் கோயில் தனித்தும் அதனைச் சுற்றி நீராழி மண்டப அமைப்பும் தென்படுகின்றன. நீராழி, முன்மண்டபத்தைப் பிரித்துக் காட்டுகிறது. அர்த்த மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும், நேராக கர்ப்பக்கிரகத்தில் மிகப் பெரிய, பதினாறு பட்டை வடிவச் சிவலிங்கத்தையும், ஆவுடையாரையும் தரிசிக்கலாம். மிக அழகிய, பளபளப்பான கரியநிறக் கருங்கல்லில், செதுக்கப்பட்டு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது சிவலிங்கம். அர்த்த மண்டப பக்கச் சுவர்களில், வலது பக்கம் திருமால்-மகாலட்சுமி, இடது பக்கம் நான்முகன்-கலைமகளும் இரு தம்பதியரும் அமர்ந்த கோலத்தில் இறைவனின் பார்வையில் படுமாறு மிக நேர்த்தியாக சுவரில் செதுக்கப்பட்டு பொலிகின்றனர். இம்மலை ‘பணைமலை’ என்றானது எவ்வாறு? பணை என்றால், மிக உயரமான, ஓங்கிய என்ற பொருளில் பாமர மக்களிடையே புழங்கும் சொல்.பனைமலையை வடமொழியில் தாளகிரி என்கின்றனர். ஆகவே, இறைவன், தாளகிரீஸ்வரர்! பணைமலைக் கோயிலின் வடகிழக்குத் திசையில் தென்திசை நோக்கியவாறு அம்மன் சந்நதி அமைந்துள்ளது. அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அம்மன் திருவுரு காட்சியளிக்கின்றது. அம்மனை ‘அஸ்த தாளாம்பிகை’ என்று போற்றுகிறார்கள். அம்மனின் மேற்கைகள் அங்குசத்தையும், பாசத்தையும் தாங்கியுள்ளன; கீழ் வலக்கை அபய முத்திரை, கீழ் இடதுகை வரத முத்திரை காட்டுகின்றன.

அமைவிடம்:

 கோயிலை அடைய செஞ்சியிலிருந்து அனந்தபுரம் வழியாகவும் விழுப்புரத்திலிருந்து கணடாச்சிபுரம் சூரப்பட்டு, அன்னியூர் வழியாகவும் பேருந்து வசதிகள் உள்ளன.

தொடர்பு கொள்ள :

வீரப்பன் – 9443048613   நம்பி – 9566623942

காசி – 8056863301

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post சிவன் காலையில் பச்சை நிறத்துடன் மாலை பொன் நிறத்துடன் மாறும் அதிசயம் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

விநாயகரின் அபூர்வ தகவல்கள்

$
0
0

   சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் கிழக்கு கடற்கரை பகுதியான கடோங்கில் பிரசித்தி பெற்ற செண்பக விநாயகர் கோவில் உள்ளது. செண்பக மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை வைத்து இந்த கோவில் கட்டப்பட்டதால் செண்பக விநாயகர் கோவில் என்று பெயர் வைக்கப்பட்டது.  ஐந்து  தலை நாகருடன், செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் வரகுண கணபதி என்ற திருநாமம் பூண்டு, பக்தர்களுக்கு அருள்கிறார், ‘இறை  முதல்வன்’.

 கர்நாடக மாநிலத்தில் செர்செப்பா நீர்வீழ்ச்சியின் அருகே ஒரு விநாயகர் அருள்பாலிக்கிறார். இக்கோயிலின் மேற்பகுதியில் காணப்படும் ஒரு துவாரம் வழியாக   அருவி நீர் நேரடியாக விநாயகர் மீது விழுகிறது. இப்படி அருவியே ஆனைமுகனை வணங்குவதால், இவர், ‘நீர்வீழ்ச்சி விநாயகர்’’ என்று அழைக்கப்படுகிறார். ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். விநாயகரின் உயரம் 20 அடி, அகலம் 10 அடி. ஏணிப்படியில் ஏறிச்சென்றுதான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

 திருச்சி பாலக்கரையில் அருள்புரிகிறார் இரட்டைப் பிள்ளையார்கள். திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டை பிள்ளையார்களுக்கு மாம்பழம் அல்லது மாம்பழச்சாறு நைவேத்யம் செய்து ஏழை தம்பதிகளுக்கு அளித்தால் கணவன்-மனைவி உறவு பலப்படும் என்றும், இரட்டையர்களுக்கு சந்தனக்காப்பு செய்து வணங்கினால் கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் பெறலாம் என்றும், அறுகம்புல் மாலை சூட்டி வணங்கினால் கேது தோஷம் நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். பொதுவாக எந்த ஊரிலும் விநாயகர் திருக்கோவிலில் பள்ளியறை கிடையாது. விதிவிலக்காக புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் பள்ளி அறை உண்டு.

 எல்லா திருக்கோவில்களிலும் ஐந்து கரங்களுடன் காட்சி தருவார் விநாயகப்பெருமான். ஆனால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரும், கர்நாடகா கோகர்ணம் திருத்தலத்தில் உள்ள விநாயகரும் இரண்டு திருக்கரங்களுடன் காட்சி தருகின்றனர். எல்லா திருத்தலங்களிலும் இராஜ கோபுரத்தின் முன் வலப்புரம் விநாயகரும் இடப்புரம் முருகனும் இருப்பார்கள். ஆனால் உத்தர கோசமங்கை தலத்தில் வலப்புரம் முருகனும் இடப்புரம் விநாயகரும் கோவில் கொண்டுள்ளார்கள்.

   திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் கோபுர வாசலுக்கு மேல் இடது பக்கமாக வலம்புரி விநாயகர் எழுந்தருளியுள்ளார். இப்பிள்ளையாருக்கு  வெண்ணெய் சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது. ஜப்பான் நாட்டின் காங்கி-டெக் என்ற புத்தமத கடவுளுடன் விநாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இவரை விநாயக்‌ஷா, கவான்வின்ஷேர் என்ற பெயர்களில் அழைக்கின்றனர். யோகநிலையிலும் விநாயகர் சிலைகள் உள்ளன. இங்குள்ள கோயில்களில் திசைக்கு ஒன்றாக நான்கு விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு அவரை திசைகளின் காவலராக கருதி வழிபடுகின்றனர். கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் இங்கு விநாயகரை வழிபடும் வழக்கம் துவங்கியது.

 மதுரை கீழஆவணிமூல வீதியில் உள்ளது பைரவர் கோயில். மதுரை மீனாட்சி அம்மனுக்குக் காவல் தெய்வமான இவருக்கு முன்புறம் சோமசூரிய கணபதி உள்ளார். தும்பிக்கையில் சூரியன் மற்றும் பிறைச்சந்திரனுடன் இவர் காட்சி தருவதால், இவர் ‘சோமசூரிய கணபதி’எனப்படுகிறார். சந்திராஷ்டமம் காலத்தில் இவரை வணங்கினால், சோதனைகள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிற கிரக தோஷங்கள் மற்றும் நாகதோஷம் உள்ளவர்கள் இவரை வணங்குவர். எதிரி பயம், பிணி, பீடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சூரியனும், சந்திரனும் சந்திக்கும் அமாவாசை நாளில் இவருக்கு அபிஷேகங்கள் செய்து வணங்கிட அரிய பல பேறுகளையும் பெறலாம் என்கிறார்கள்.

 நாகை மாவட்டம் ‘பூம்புகார்’என்றழைக்கப்படும் காவிரிப்பூம்பட்டினத்தில்தான் குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கடலோடு சங்கமம் ஆகிறது. காவிரி கடலோடு கலக்கும் இடத்தை ‘சங்கமத்துறை’என்றும், இந்த இடத்தில் நீராடிவிட்டு மூதாதையருக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ருதோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். காவிரி சங்கமத்துறையில் கோயில் கொண்டுள்ள விநாயகர்‘சங்குமுக விநாயகர்’என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோயில் இது. இந்த விநாயகரை வணங்கி ஒரு காரியம் தொடங்குமுன் தேங்காய் உடைத்து வேண்டிக் கொண்டால் அச்செயல் எத்தடையுமின்றி எளிதாக ஈடேறும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post விநாயகரின் அபூர்வ தகவல்கள் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல்

$
0
0

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நிறைந்த கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! 15

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் 50

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #Viluppuram #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #baalaganapathi #ganapathi

  Send Your Feedback at : editor@swasthiktv.com

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

The post அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் appeared first on Spiritual / Devotional / Wellness / Yoga/ Hindu Religion / Mahaan / Guru / Spiritual Web TV.

Viewing all 679 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>